அகண்ட தமிழ் உலகம் எனும் அமைப்பானது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒரே பண்பாட்டுத்தளத்தில் இணைக்கும் நோக்குடன், உலகளாவிய ரீதியில் 47க்கு மேற்பட்ட நாடுகளில் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது. இது தமிழர் பண்பாட்டையும் விழுமியத்தினையும் பாதுகாத்து வளர்ப்பதோடு, உலகில் வாழும் தமிழரிடையே ஒற்றுமையினையும் ஒத்துழைப்பினையும் முன்னேற்றத்தினையும் வலுப்படுத்தி முன்கொண்டுசெல்வதில் வருகின்றது.
அறத்தினை முதன்மையாகக்கொண்ட, தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள், உலகம் தழுவிய நிலையில் இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சீனம், ரஷியன் முதலிய 60க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன்பொருண்மை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகின்றது.
இத்தகைய பெருமைபெறும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளினைப் போற்றும் திருக்குறள் மாநாடு, உலகளாவிய “அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்” என்னும் கருப்பொருளினைக் கொண்டு இலங்கையில் மட்டக்களப்பு மண்ணிலே சிறப்பாக இடம்பெற உள்ளதோடு, தமிழர் சமூகம் மேன்மைபெற பல நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, எமது வாழ்வியல் நெறியினையும் வளமூட்டும் வள்ளுவத்தின் பொருண்மையினையும் உணர்ந்து செயற்படுவோம்.
மாநாட்டுத் தலைவர்
மாநாட்டுச் செயலாளர்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
மாநாட்டுப் பொருளாளர்