தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளினைப் போற்றும் திருக்குறள் மாநாடு, உலகளாவிய “அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்” என்னும் கருப்பொருளினைக் கொண்டு இலங்கையில் மட்டக்களப்பு மண்ணிலே சிறப்பாக இடம்பெற உள்ளதோடு, தமிழர் சமூகம் மேன்மைபெற பல நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, எமது வாழ்வியல் நெறியினையும் வளமூட்டும் வள்ளுவத்தின் பொருண்மையினையும் உணர்ந்து செயற்படுவோம்.